நாடாளுமன்றத்துக்கு இன்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் பிரசன்னமாகவில்லை.ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இன்று முதலாவது நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படுகிறது.

எனினும் இதன்போது மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை.

ஏற்கனவே கோட்டாகோகம தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு மகிந்த ராஜபக்ச உட்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதி சபாநாயகரின் தெரிவு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று தீவிர நிலை ஏற்பட்டது. சர்வகட்சி அரசாங்க நாடாளுமன்ற அமர்விலும் ஆளும் எதிர்கட்சியினர் மோதல் நிலை!

ஏற்கனவே பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அந்த நிலையில் இருந்து விலகியைதை அடுத்து, பிரதி சபாநாயகருக்கான தெரிவை சபாநாயகர் கோரினார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி கவிரட்னவை பிரதி சபாநாயகராக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்

இதனையடுத்து ஆளும் கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டது.

நாடாளுமன்றில் பிரசன்னமாகாத மகிந்தவும் நாமலும்!இந்தநிலையில் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரப்பட்டது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஆளும் கட்சியில் இருந்து விலகிய விமல் வீரவன்ச உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

நாடு இருக்கும் நிலையில் பிரதமரும் எதிர்கட்சி தலைவரும் இணைந்து இதில் தீர்மானம் ஒன்றை எட்டவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை மீறி வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், தமது உறுப்பினர்கள் வாக்குகளை நிராகரிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தனர்.

இதனையடுத்து முன்மொழியப்பட்டவர்களில் இருவரில் ஒருவர் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள சபாநாயகர் அவகாசத்தை வழங்கினார்.

எனினும் இதற்கு இரண்டு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதன்படி வாக்கெடுப்பு தற்போது நடத்தப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here