அரசுக்கெதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களும் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.
அந்த வகையில் பொகவந்தலா பெருந்தோட்டப் பகுதியில் இன்றையதினம் காலை தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அரசுக்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.