முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவியதாக தெரிவித்து ரிஷாட் பதியுதீன் ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here