மான நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ்

நடிகர் தனுஷை மகன் என உரிமை கோரி மதுரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை உயர்நிதி மன்றம் ரத்து செய்து இருந்தது.

இதனிடையே தங்களை கொலை செய்ய முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கில் உத்தரவு பெற்றதாகவும் நடிகர் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர் அந்த தம்பதியினர்.

மேலும் தற்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடிகர் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா தங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்பு கோராவிட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here