சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து இருப்பவர் சமீரா ரெட்டி. அந்த படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களை அந்த நேரத்தில் வெகுவாக கவர்ந்தார் அவர். அதற்க்கு பிறகு சில படங்களில் நடித்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
திருமணமாகி முதல் குழந்தை பிறந்த பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக குறிப்பிட்டு அப்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.
மன அழுத்தம் பற்றி அவர் மற்ற பெண்களுக்கு அந்த பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 8 மணி நேரம் தூங்குங்கள், உங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள், அரை மணி நேரம் ஒர்கவுட் செய்யுங்கள் என அட்வைஸ் கூறி உள்ளார் அவர்.