வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தீர்மானித்துள்ளதாக இயக்குநர் சுசிகணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை சமூக வலைதளப்பக்கத்தில் இயக்குநர் சுசிகணேசன் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அவரது பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகாராணி வேலுநாச்சியாரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியது, படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடு போரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு, உலகமே கொண்டாட வைத்துவிடலாம்” என அவர் பதிவேற்றியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here