தமிழ் சினிமாவின் பாதையை மாற்றியவர்களில் மிக முக்கியமானவர் பாலா. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி ஆகிய படங்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற்றவை.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் கூட வசூல் ரீதியாக ஹிட் அடித்தது, இந்நிலையில் பாலா அடுத்து சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் அதர்வா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க, சூர்யா கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்று தெரிகின்றது.
இதுமட்டுமின்றி அவன் இவன் படத்திற்கு பிறகு பாலாவுடன் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தில் கைக்கோர்க்கவுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.
இப்படம் கண்டிப்பாக பழைய பாலாவை நாம் பார்க்கலாம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.