தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.
நயன்தாரா, தற்போது ரஜினியின் அண்ணாத்த, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஒருவர், இதில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்று தெரிவிக்கின்றனர்.
அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட நடிகர் ‘நான் ஈ’ சுதீப் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது