சினிமாவில் மாஸாக, பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்யும் படி படங்கள் எடுக்க நிறைய இயக்குனர் இருக்கிறார்கள். ஆனால் நல்ல கதைக்களத்தை கொண்டு மக்களை ஈர்க்கும் வண்ணம் படங்களை இயக்கும் சில இயக்குனர்களில் ராம் அவர்களும் ஒருவர்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களை பார்த்தாலே புரியும் அவர் எப்படிபட்ட இயக்குனர் என்று.
இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களின் நூலகத்தின் திறப்பு விழாவில் ராம் பேசும்போது, பாலு மகேந்திரா அவர்களை மிஸ் செய்கிறேன். கற்றது தமிழ் படத்தை அவரிடம் காட்டினேன், ஆசியாவில் சிறந்த 5 படங்களில் இது ஒன்று என கூறினார்.
தங்க மீன்கள் படத்தை காட்டினேன், மோசமான படம் என்றார். தரமணி படத்தையும் காட்ட நினைத்தேன், ஆனால் முடியவில்லை என்று வருத்தமாக பேசினார்.